Friday 3rd of May 2024 11:35:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸ் - ஆல்ப்ஸ் பகுதியில் இடம்பெற்ற  ஹெலிகப்டர் விபத்தில் 5 போ் பலி!

பிரான்ஸ் - ஆல்ப்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் 5 போ் பலி!


பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஹெலிகப்டர் விபத்துக்குள்ளாகி நேற்று விழுந்தில் அதில் இருந்த 6 பேரில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகப்டர் மீட்புப் பணி ஒன்றுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது சவோய் பகுதியில் உள்ள பொன்வில்லார்ட் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தக் ஹெலிகப்டரில் இருந்த விமானி மட்டும் படுகாயங்களுடன் தப்பியுள்ளார்.

சேர்விஸ் ஏரியன் பிரான்சிஸ் (Service Aérien Français) என்ற தனியார் நிறுவனம் பிரான்ஸ் முழுவதும் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஹெலிகப்டர்களை ஈடுபடுத்த அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், பிற விமான சேவைகளையும் நடத்துகிறது.

இந்நிலையில் இந்த விபத்துக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் தேசத்தின் அனுதாபத்தைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE